பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே: (திடுக்கிட்டு) அம்மா, உன் பெயர் சொர்ணமா? சொ: ஆமாம், உனக்கு எப்படித் தெரியும். சே: இப்ப நீங்க சொன்னது, கருணாகரத் தேவர் விஷய மாகத்தானே. சொ: ஆமாம்பா! சே: அம்மா ! இந்தப் பெண், என்னால் வீணாகச் சந்தேகிக் கப்பட்ட பெண் வேறு யாருமில்லையம்மா, பவானியின் மகள். தேவரின் குமாரிதான். சொ: தேவர் மகளா? தெய்வமே, இவளையாவது காப்பாற் னாயே. அப்பா! என் சேதி உனக்கு எப்படித் தெரியும்? சே: தேவரே சொன்னார். சொ: ரத்னம்! அந்தப் பெண், உனக்குத் தங்கச்சி முறை தெரியுமா? ர: எப்படிம்மா? சொ: விவரம் கேட்காதே. நீ தேவர் மகன். இந்தத் துர்ப்பாக்கியவதி கழுத்திலே அவர் கையாலே ஒரு தாலிக் கயறு கட்டாததாலே, சொந்த அப்பன் வீட்டிலேயே திருடப்போற நிலை வந்தது. கஷ்டப்படாதீர்களம்மா, என்ன செய்வது ? எல்லாம் இனி சுகமாக முடியும். ர்: அதிசயமா இருக்கு. எனக்கு சுசீலாவிடம், ஒருவித அன்பு உண்டாயிற்று. இனி நீ என் தங்கை என்றுகூட நான் சொன்னேன். உன் தங்கையேதான் ! சந்தேகமென்ன? ர: (பயந்து) அடே! ஒரு விஷயத்தை மறந்துவிட்டேனே. அந்தப் பெண், விஷம் குடிக்க இருந்துதே, இந்த விபரீதம் நேரிட்டதாலே ஒருவேளை.. [சேகர் உடனே பதைத்து} சே: நான் ஒரு முட்டாள், இதோ வருகிறேன். [சுசீலா சுசீலா! என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.]

79

79