பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வாலிபன் பயந்துகொண்டு செல்கிறான் வீதியில். அந்தச் சமயம் டாக்டரும். ரத்னமும் வருகிறார். கள். டாக்டர் வாலிபனை அடையாளம் கண்டு பிடித்து.] சே: தம்பீ ! இங்கே என்னடா இந்த நேரத்தில். வா: (குளறுகிறான்) இல்லை.. சும்மா...... இப்படி. யாரு இந்தத் தம்பீ ? சே: நம்ம பக்கத்து வீடு. ராமாயணக் காலட்சேபம் செய்யறாரே ரங்காச்சாரி, அவர் மகன். (வாலிபன் நழுவுகிறான். ரத்னம் சிரித்துவிட்டு.) அப்பா ராமாயண காலட்சேபம் செய்கிறாரு. மகன் இப்படி, பாரத காலட்சேபத்துக்குக் கிளம்பி இருக்கான்! டாக்டர்! இதுக்குத்தான் ரோந்து வர்ரதுன்னு பேரு, போவட்டும் வாங்க. இந்தமாதிரி இடத்திலே எல்லாம் தெரிஞ் சவங்களா இருந்தாக்கூட கண்டுகொள்ளக்கூடாது, கண்டும் காணாத மாதிரியாத்தான் போயிடுவாங்க. நீங்க ரெண்டுபேரும் புதிசு. (வேதம் வீட்டருகே போய்ச் சேருகிறார்கள்.] காட்சி 43 இடம் :- வேதம் வீடு. இருப்போர்:--ஆறுமுகம், வேதம், (பிறகு) சேகர் ரத்னம், (வாயிற்படி அருகே போய் உரத்த குரலில்.) டே ! ஆறுமுகம்! ஆறுமுகம். (வேகமாக ஆறுமுகம் ஓடிவந்து ரத்னத்தின் முன்பு அடக்கமாக நின்றுகொண்டு.] ஆ: ஏண்ணேன் ! இந்த நேரத்திலே இவ்வளவு தூரம்! சொல்லி அனுப்பினா நான் வரமாட்டனா? டே ! ஆறுமுகம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே எவ னாவது ஜமீன்தாரன் வந்தானா, இந்தப் பக்கத்திலே, யாரு வீட்டுக்காவது.

·90

90