பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இயக்கமாக மாறியிருக்கிறது. இப்படி மாறியிருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு சர்க்காரால் 144, 124, 153 போடப்படுகிறது.

பார்ப்பன அன்பர்களுக்கு

பார்ப்பனர்கள் ஆதிக்கத்தோடு இருந்த காலத்தில் நம்முடைய சிறுவர்கள் பல இடுக்கண்களிடையே படிப்புப் பெறமுடியாமலிருந்தது. அதைப் பயன்படுத்தி அவர்கள்தான் அதிகமாகப் படித்து வந்தார்கள்! பிராம்மண நண்பர்கள் நம்மைப்பார்த்து, “உங்கள் மாணவர்களே இனி படிக்கட்டும், நாங்கள் வேறு வேலையிலே ஈடுபடுகிறோம்” என்று சொல்லுவார்களா?

பிராம்மண நண்பனே,

நீ இப்படி சொல்லிப்பார், பார்க்கலாம்! இப்படி சொல்லுவாயா, சொல்லமாட்டாயே! “பல ஆண்டுகளாக நாங்கள் படித்தது போதும். வேத ஆகமங்களை கற்கப் போகிறோம். வருங்காலத்திலே அதற்கு நல்ல மதிப்பை நாங்கள் உண்டாக்கப்போகிறோம்” என்று வேத ஆகமம் படிப்பதிலே நாட்டம் செலுத்துவதுதானே ! இனி வேத ஆகமத்துக்கு நாட்டிலே மதிப்பு ஏற்படுமோ ஏற்படாதோ என்ற பயமா உனக்கு? கல்லூரிகளிலே உனக்குத்தக்க இடமில்லாததற்காக சி ஆருக்கு தூது அனுப்புகிறாய், சர். அல்லாடியைத் தேடி அலைகிறாய், நேருவுக்குத் தந்தி கொடுக்கலாமா என்கிறாய்! பதட்டத்துடன் படேலை நாடுகிறாய்.

இப்படியெல்லாம் நீ தூது போய் என்ன சாதித்துவிட முடியும்? மேலிடத்துக்குத் தூது சென்றுதான் பாரேன். வேண்டுமானால் ஹிந்து பத்திரிகையிலே ‘கல்வியும் பதவி களும்’ (Education and Employment) என்று தலையங்கம் எழுதச் சொல்.

எங்களிடம் வந்து பழையபடி கலப்பையையும் ஏரை யும் எடுத்துக்கொண்டு கிராமப்புணருத்தாரண வேலையிலே