இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
153
பொங்கலெனில் தமிழர்க்குத் திருநாள் என்று
புதுமெருகு தந்த அண்ணன் அந்த ஆண்டுப்
பொங்கலினைக் காஞ்சியிலே சுவைக்க எண்ணிப்
போம்வழியில், "கலைவாணர் சிலைவைத் துள்ளோம்,
தங்களது திருக்கரத்தால் திறக்க வேண்டும்;
தமிழ்த்தாயின் கலைமகனைத் தலைமகன்நீ
சிங்காரம் செய்க" என்றார்; இறுதி யாகச்
சிலசொற்கள் பேசிவிட்டுச் சென்றார்; மீண்டார்!
உண்ணவுமே இயலவில்லை; ஒருப ருக்கை
உட்செல்ல வழியில்லை; உடல்மெ லிந்து,
கண்மலரும் ஒளியிழந்து, நடைத ளர்ந்து,
காற்றுக்கு மொட்டைமாடி மீத மர்ந்து,
எண்ணமெலாம் நாடு, மொழி, கழகம், மக்கள்,
என்றிருக்க, அறியார்போல் நடித்து வந்த
அண்ணனுக்கு நிகர் யாரே? அவர்பார்க் காமல்
அமரிக்க மில்லருக்குக் கொடுத்த தந்தி...