பக்கம்:அண்ணா காவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நகரம்



கல்லினைப் பேசச் செய்து

கடற்புறம் நிறுத்தி யுள்ள

மல்லனாம்; மகேந்திரன் பெற்ற

நரசிம்ம வர்மன் மள்ளன்!

எல்லையைத் தொடமு யன்ற

இணைபுலி கேசி தன்னைப்...

'பல்லவத் தலைமை மூதூர்

பாராதே!' எனத் துரத்தி




வெற்றிகள் குவித்த வீரன்

விளையாடி நின்ற பேருர்!

பொற்றொடி மாதர் நல்லார்

புறவெழில் மின்ன நெய்து

சுற்றிடும் பட்டுச் சேலை

சுழன்றிடுங் தறிகள் ஓட்டம்

அற்றிட ஆடை நல்லூர்,

அன்றுதொட் டின்றும் மேவும்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/30&oldid=1078574" இலிருந்து மீள்விக்கப்பட்டது