இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்லினைப் பேசச் செய்து
கடற்புறம் நிறுத்தி யுள்ள
மல்லனாம்; மகேந்திரன் பெற்ற
நரசிம்ம வர்மன் மள்ளன்!
எல்லையைத் தொடமு யன்ற
இணைபுலி கேசி தன்னைப்...
'பல்லவத் தலைமை மூதூர்
பாராதே!' எனத் துரத்தி
வெற்றிகள் குவித்த வீரன்
விளையாடி நின்ற பேருர்!
பொற்றொடி மாதர் நல்லார்
- புறவெழில் மின்ன நெய்து
சுற்றிடும் பட்டுச் சேலை
- சுழன்றிடுங் தறிகள் ஓட்டம்
அற்றிட ஆடை நல்லூர்,
- அன்றுதொட் டின்றும் மேவும்!