பக்கம்:அண்ணா காவியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

42

எத்தனையோ அழகப்பர் தியாக ராயர்

இன்றளவும் சாகாமல் வாழ்கின் றார்கள்!

எத்துணையோ வள்ளல்கள் கொடைச்செ யல்கள்

இயற்றியுள்ளார்: எனினும் நம் பச்சை யப்பர்

மொத்தமாக நிறுவியுள்ள கல்விச் சாலை

மொய்ம்புபிற அறநிலையம் பெறுவ துண்டோ?

சத்துநிறை தருமந்தான் பிறிதும் ஏது?

சரியான அறிவுவழி காட்டிச் சென்றார்.


பச்சையப்பர் அறஆணைப் பணியால் அன்று

பயன்தருமோர் கல்லூரி அமையப் பெற்றே

இச்சையுடன் மேற்கல்வி பயில்வார்க் கேற்ற

எழில் அறிவுக் கூடமாக விளங்கி நிற்க,

அச்சமிக அண்ணாவும் அங்கே சேர்ந்தார்!

அணிசென்னை மையத்தின் கூச்சல், தொல்லை,

துச்சமெனக் கருதிவெகு கவன மாகத்

தொடங்கினரே இடைநிலையாம் வகுப்பு தன்னை!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/44&oldid=1078617" இலிருந்து மீள்விக்கப்பட்டது