இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
எத்தனையோ அழகப்பர் தியாக ராயர்
- இன்றளவும் சாகாமல் வாழ்கின் றார்கள்!
எத்துணையோ வள்ளல்கள் கொடைச்செ யல்கள்
- இயற்றியுள்ளார்: எனினும் நம் பச்சை யப்பர்
மொத்தமாக நிறுவியுள்ள கல்விச் சாலை
- மொய்ம்புபிற அறநிலையம் பெறுவ துண்டோ?
சத்துநிறை தருமந்தான் பிறிதும் ஏது?
- சரியான அறிவுவழி காட்டிச் சென்றார்.
பச்சையப்பர் அறஆணைப் பணியால் அன்று
- பயன்தருமோர் கல்லூரி அமையப் பெற்றே
இச்சையுடன் மேற்கல்வி பயில்வார்க் கேற்ற
- எழில் அறிவுக் கூடமாக விளங்கி நிற்க,
அச்சமிக அண்ணாவும் அங்கே சேர்ந்தார்!
- அணிசென்னை மையத்தின் கூச்சல், தொல்லை,
துச்சமெனக் கருதிவெகு கவன மாகத்
- தொடங்கினரே இடைநிலையாம் வகுப்பு தன்னை!