பக்கம்:அண்ணா காவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாணாக்கர் இலம்பகம்
69

நற்பயிற்சி அண்ணாவின் முயற்சி யாலே
நடைமுறையில் பெற்றவர்கள் நாடு முற்றும்

கற்பதனால் ஆயபயன் விளங்கு மாறு
கல்லூரி விடுமுறையில் மாவட்டத்தில்

சொற்பயிற்சி மேற்கொண்டு, கொள்கை சொல்லிச், :சுற்றிவந்தார் ஒருதிங்கள் சிற்றுார் தோறும்!

அற்பமென ஒதுக்கிடவே யாரால் ஒல்லும்?
அய்யாவும் பெருமகிழ்வு கொண்டார் அன்றே!


புதியதொரு பிரசாரப் படையைக் கண்டு
புத்துணர்ச்சி பெற்றனரே இயக்கத் தோழர்!

கதியெனவே நம்பி,தள பதியாய் ஆன
கண்ணியத்தின் இருப்பிடமாம் அண்ணா செய்த

அதிசயத்தை ஆர்வமுடன் ஆத ரித்தே,
ஆங்காங்குப் பொதுக்கூட்டம் நடத்தித் தந்தார்.

விதிதன்னை நிர்ணயிக்கும் வீர ரான -
விறல்கருணா நிதிமட்டும் தனிப்பா தைதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/71&oldid=1079224" இலிருந்து மீள்விக்கப்பட்டது