இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75
பாதிக்கப் பட்டவர்கள் சீறிப் பாய்ந்து
பார்த்தார்கள்; பலிக்கவில்லை! இனிமேல் தத்தம்
ஆதிக்கம் செல்லாதென் றுணர்ந்த தாலே
அகன்றார்கள்; சுயநலத்தைப்பெரிதாய் எண்ணி!
நீதிக்கு முதலிடத்தை தந்த அண்ணன்
நிமிர்ந்துநின்று பெரியாரின் கருத்திற் கேற்பச்
சாதிக்கத் தொடங்கிவிட்டார்! புரட்சி யான
சரித்திரமே தொடர்ந்ததின்னும் வேகமாக!
கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற
கவினுறுநல் எழுச்சிமிகு பெயரும் தந்து
தட்சிணத்தில் புத்துயிரும் ஊட்டி விட்டார்!
தகைமிக்க மாணவரின் கொள்கை நாதம்
உட்சென்றே உணர்வெழுப்பி ஊர்கள் தோறும்
உத்வேகம் மூட்டிவிடப், பாம ரர்கள்
பட்சிகளின் கூட்டமெனப் பறந்து வந்து
பலமிக்க கழகமாக ஆக்கினார்கள்!