இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93
அப்போ தெல்லாம் அய்யாவின் ஊடல்
எப்போ தும்போல் இருந்ததென் றாலும்
"பதுங்கிட வில்லை; ஒதுங்கினேன்!” என்றே
முழங்கினர் அண்ணா! முறைஅது தானே?
எல்லாம் இனிதே நிறைவே றிற்றென
நல்லஎண் ணத்தில் நாமிருந் தோமே!
அமைதிக் குப்பின் அடங்காப் புயலொன்று
எமைஎதிர் கொள்ளுமென் றெதிர்பார்க்க வில்லையே!