பக்கம்:அண்ணா காவியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கீறல் விழுந்த காதை
93


அப்போ தெல்லாம் அய்யாவின் ஊடல்
எப்போ தும்போல் இருந்ததென் றாலும்

"பதுங்கிட வில்லை; ஒதுங்கினேன்!” என்றே
முழங்கினர் அண்ணா! முறைஅது தானே?



எல்லாம் இனிதே நிறைவே றிற்றென
நல்லஎண் ணத்தில் நாமிருந் தோமே!

அமைதிக் குப்பின் அடங்காப் புயலொன்று
எமைஎதிர் கொள்ளுமென் றெதிர்பார்க்க வில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/95&oldid=1079689" இலிருந்து மீள்விக்கப்பட்டது