இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
103
- உங்கள் கரம் தங்கிடவேண்டும் இந்நூல்.
- உங்கள் கருத்தேறிட வேண்டும்
- இவர் கவிதைச் சுவை முழுவதும்.
- உங்கள் உணர்விலே புதுமை தந்திடவல்ல
- இக்கவிதை நூலதுவும்
- உமக்கேற்றதாகும் எனப் பரிந்துரைக்கும் வாய்ப்புப்
- பெற்றேன்;
- மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன்.
- வாழ்க ஆனந்தன்!
- வளர்க அவர் கவிதை வளம் !
பின்னர் சென்னை திரும்பியதும், கலைஞர் தமது சிறப்புரையையும். உடனே எழுதித் தந்ததுடன், இந்தத் தொகுப்பு நூலுக்குப் “பூக்காடு” என்ற தலைப்பும் தந்தார். ஒவிய நண்பர் செல்லப்பனை உற்சாகப்படுத்த, உட்புறம் மட்டுமல்லாமல், வெளிப்புற அட்டையின் இரு பக்க ஓவியங்களையும் அவரையே வரைந்து தரச் சொன்னேன். அவருக்கு wrapper design அது முதல் முயற்சி!
இந்தப் ‘பூக்காடு’ நூல்தான் பரிசும் புகழும் நிறையப் பெற்றது பிற்காலத்தில்! இது அண்ணா தொடுத்த கவிதை மாலையல்லவா?