பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தம்பித் தலைவர் அவர்களே!!

“அடெ, வாய்யா மாநாடு ஸ்பெஷலிஸ்ட்” என்று. உற்சாகத்துடன் அண்ணா என்னை அருகே அழைத்துத் தட்டிக் கொடுத்து “என்னா? எப்போ வந்தே? இங்கே என்னென்ன விசேஷம்?” என்று கனிவுடன் வினவினார்.

“‘நான் இப்பதான் முதல் தடவையா மாநாடு நடத்தறேன். நீ முன்னாடியே வந்திருந்து எனக்கு உதவணும். உன் அனுபவம் துணையாயிருக்குமல்லவா?’ என்று கடலூர் திராவிடமணி கடிதம் எழுதியிருந்தாரு அண்ணா. அதான் நாலு நாள் முன்னதாக வந்தேன். மாநாட்டு ஏற்பாடுகள், அலங்காரமெல்லாம் பார்த்தீங்களா? பண்ணுருட்டியிலேயிருந்து இந்தப் புதுப்பேட்டை வரை யிலே ரோட்டிலே இரண்டு பக்கமும் தென்னைமட்டை களை முழுசு முழுசாப் புதச்சி வச்சி, மயில் தோகைை விரிச்சாப்போலே அழகா வச்சிருக்கோம்.”

“நல்ல புதுமையான கற்பனைதான். சரி, வேறென்ன இங்கே தனியான சிறப்பு?” -அண்ணா கேட்டார்.

“மாநாட்டுக்கு முதல் நாளே—இது திராவிட மாணவர் மாநாடுதானே—இங்கே நமக்கென்ன வேலைண்ணு எண்ணாமெ—இந்தத் தென்னார்க்காடு மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலேயிருந்தும், கட்டுச். சோறு எடுத்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளோட, குடும்பம் குடும்பமாய் மக்கள் வந்துட்டேயிருக்காங்க. இந்த மாதிரி எழுச்சியெ வேற எங்கேயும் பார்த்ததில்லே அண்ணா!” வியப்புடன் கூறினேன். கடந்த ஆண்டு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மாவட்டம் இது.