பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இளவரசி வாழ்க



ஒரு நாள், அவள் தந்தையிடம் தனியே பேச விழைவதாகத் தகவல் அனுப்பி இணக்கமும் பெற்றுக்கொண்டாள். அன்றொரு நாள் தான் மனம் விட்டுப் பேசிய யதார்த்தப் பேச்சைத் தவறாக எடுத்துக்கொண்ட தன் தந்தையிடம் முகம் நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வை பார்த்துப் பேச வாய்த்த சந்தர்ப்பம் வெகு சொற்பம்.

இப்போது மீண்டும் அவள் தந்தையிடம் பேசவேண்டும். இன்னும் பகுத்துக் கூறினால், அந்நாட்டின் அரசரிடம் பேச வேண்டும்! அவள் அண்டிவந்தாள். “அப்பா! புதுச் செவிலியைப் பற்றி உங்கள் கருத்தை அறியலாமா?” என்று ஆரம்பித்தாள்.

மகிழ்வின் வெள்ளம் கண்களில் விளிம்பு கட்டி நிற்க, வீற்றிருந்த மன்னர் பஞ்சணை மெத்தையில் திண்டுகளின்மீது ஆரோகணித்துச் சாய்ந்தவாறு “ம்....நாதசுரபியைத்தானே கேட்கிறாய் கன்யா?” என்று எதிர்க் கேள்வி கேட்டார் அரசர்.

“ஆமாம் தந்தையே!” பணிவுடனும் பாசத்துடனும் பதிலிறுத்தாள் அரசிளங்குமரி தொடர்ந்தாள்:

“தங்கமான பெண். ரொம்பவும் அடக்கம். அதிகப்படியான பாசம். குழந்தை அவளுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது! நீங்கள் மட்டும் அவளிடமிருந்து எட்டி இருந்துவிட மறந்துவிடாதீர்கள். என்ன இருந்தாலும், உங்கள் பணிப்பெண் நாதசுரபி! ராஜ அந்தஸ்து, கவுரவம் முதலியவற்றை நீங்கள் இந்தச் செவிலிக்காக ஒதுக்கிவிட முடியுமா? ஒதுக்கிவிடலாகுமா!?....நீங்கள் நாட்டின் காவலர். அவளோ குழந்தைக்கு மட்டுமே காவல் பெண்!...அவள் யாரோ! உங்கள் நாட்டின் கவுரவம் காற்றில் அலைந்துவிடாமல், பாதுகாத்துக் கொள்ளுங்கள்!”

உள் அர்த்தம் தொனிக்கப் பேசி முடித்தாள் கன்யாகுமரி.

அரசருக்குச் சினம் மூண்டது. “நீ தந்தைக்கே உபதேசம் செய்கிறாய். புராணத்தில் என் அப்பன் குமரனுக்கு அந்தப் பெயர்