பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அந்த நாய்க்குட்டி எங்கே?



புது உலகிலே சஞ்சரிப்பதாக அப்பொழுது பூபாலனுக்குத் தோன்றியது.

‘போன வாரம் இதே நேரத்துக்கு அறந்தாங்கி ஜெயிலிலே அடைப்பட்டுக் கிடந்தேன். ஆண்டவன் புண்ணியத்திலே தலைக்கு வந்தது தலைப்பாகையோடே போயிடுச்சு. நல்லவங்க ஒரு நாளும் கெடுவதில்லைன்னு தமிழ் வாத்தியார் அடிக்கடி பாடம் படிச்சுக் கொடுப்பாங்க - அது நூற்றுக்கு நூறு நிஜம் தான். அந்தச் சர்க்கஸ்காரன் பலே ஆள்தான். நெஞ்சில்லாத இரக்கமில்லாத அந்தப் பாவிக்கு நெஞ்சுள்ள, இரக்கமுள்ள அல்லி மகளாகப் பிறந்திருக்குது. நத்தை வயிற்றிலே முத்து பிறக்கிற கதைதான்..! ஆனா, தங்கச்சி பூங்கோதை, பூங்கோதையேதான்! அது உடம்பெல்லாம், அன்பு: செய்கையெல்லாம் அன்புதான்! அது மாதிரியேதான் அதோட அப்பாவும்...! நான் ஏழை வீட்டுப் பையன் அதுவோ பணக்கராங்க வீட்டுப் பொண்ணு! மலையும் மடுவும் சடுகுடு விளையாடற கதைதான் ஆண்டவன் பலே கில்லாடிதான்! படைப்பின் புதிர் ரொம்ப அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம் வாழ்க்கையின் புதிர்!’

வயதிற்கும் அப்பாற்பட்ட வரப்புக் கோட்டில் நின்று அவனது எண்ணங்கள் ஓடின சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். புதுச் சட்டை, நிஜார் மாற்றினான். வாரிவிடப்பட்ட கிராப்பில் ஒரே ஒரு மயிரிழை அவன் நெற்றியோடு மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது சிரித்துக் கொண்டே ஓடினான் அவனை முந்திக் கொண்டு, ஏப்பம் ஒட்டமாக ஓடியது ஆறு இட்டிலி, இரண்டு தோசை, ஒண்ணரை டம்ளர் அசல் காப்பி என்றால் காசா, லேசா?

சிறுவன் பூபாலன் கீழத் தெருவிலிருந்து ஓடி வந்தான்.

“தம்பி, உன்னை விடுதலை பண்ணிட்டாங்களாமே? நல்லவேளை, தம்பி” என்றார் காந்திஜி நூல் நிலையக் காரியதரிசி சோமசுந்தர ஆசாரி.