பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

 பாவத்தின் மூலம்

கடவுளுக்கு உண்மையாகப் பயப்படுகிறவன் தான் நீதிமானாகவும் நியாயஸ்தனாகவும் இருக்கிறான். கடவுளிடம் பக்தி இருப்பதாக வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறவன் மறைமுகமாக அதிகப் பாவங்களைச் செய்து நிறைய அநீதிகளைச் செய்கிறான்.

Ο O O

ஜாடிக்கேற்ற மூடி

படிப்புக்கேற்ற வேலையே கிடைக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருப்பவன் பைத்தியக்காரன். அவன் எந்த ஜென்மத்திலும் முன்னுக்கு வரவும் முடியாது. நிம்மதியாக வாழவும் முடியாது. கிடைத்த வேலைக்கேற்ப படித்துக் கொண்டு, தன்னை பக்குவப்படுத்தி முயற்சியுடன் வேலை செய்கிறவனே புத்திசாலி அவனே பிறர் போற்ற முன்னுக்கு வருவான்.

Ο O O

மனிதன் எந்த வகை மிருகம்?

ஏற்கெனவே பெற்றதற்காகவும் இனிமேல் பெறப் போவதற்காகவும் வாலை ஆட்டுகின்ற நாய்-நன்றியுள்ள மிருகம்தான். எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு கொடுத்தவனையே ஏறி மிதிக்கின்ற ஒருவனை எந்த மிருகத்தில் சேர்ப்பது?

Ο O O