பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


மாற்றம் பெற்றிருக்கின்றன. அது போலவே சுவைகளிலும் பயன்களிலும் மாறிமாறியே இருக்கின்றன. ஒரு இலை கசக்கிறது. ஒரு இலை புளிக்கிறது. ஒரு இலை துவக்கிறது. ஒவ்வொன்றிலும் சொல்ல முடியாத அளவுக்கு என்னென்னவோ சுவைகள். மணத்திலும் குணத்திலும் மாற்றங்கள் இருப்பது போலவே மனிதர்களிலும் இருக்கத்தான் இருக்கின்றார்கள். பயனுள்ள இலைகளைத் தெரிந்து, பயனுள்ள முறைகளில் பயன்படுத்தத் தெரிந்தால் பயன்கள் நிறையவே கிடைக்கும். அதுபோலவே, மனிதர்களையும் புரிந்து கொண்டு செயல்படுகின்றவர்களே சந்தோஷமாக வாழ்ந்து பயன் துய்க்க முடியும்.

Ο O O

இரண்டும் இரண்டுதான்...ஒன்றல்ல

உன்னளவில் நீ சந்தோஷம் அடைய வேண்டுமென்றால்நீ உலகைப்பற்றியோ உறவைப் பற்றியோ கவலைப்படக் கூடாது. சிந்திக்கவும் கூடாது. உற்றவர்கள் மற்றவர்கள் உன்னை சுற்றியிருப்பவர்கள் சந்தோஷம் பெற நீ உதவி வாழ விரும்பினால், உன்னைப் பற்றியும் உன் குடும்பத்தைப் பற்றியும் கவலைப் படக் கூடாது. சிந்திக்கவும் கூடாது. ஏனென்றால் இரண்டும் இரு துருவங்கள். இரண்டும் இரண்டுதான்... ஒன்றல்ல.

Ο O O