பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 .ராமன் வர தாமதம் ஆனதால் பரத நம்பி. தான்மூழ்க தீமூட்டினான் தாவி வந்து அணைத்து அதோ வந்தார் வந்துவிட்டார் என ஆர்ப்பரித்தவனே ஆதிவியாதி ஹரராம ஆஞ்சனேயனே


29. முடிசூட்டு விழாவில் முத்துச்சரம் தந்தாள் வைதேகி கடித்துத் துப்பியதால் கலவரப்பட்டது பேரவை ராமநாமத்தின் சுவை இதிலே இல்லை என்றவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


30. அனுமனின் கானத்தில் கனிந்து குழைந்த பாறை, நாரதனின் வீணையைப் பற்றிக் கொள்ள நாரதன் இசையில் பெரியோன் என்ற தருக்கழித்தவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே