பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 துக்காக, அது ராத்திரிப் பூராவும் சாப்பிடாது. வம்பு பண்ணியதை என்னல் மறக்கவே முடியவில்லை. அந்த ஒரு கார ணத்தை முன்னிட்டுத்தான், இந்தக் கருவாட்டை இவ்வளவு தூரத்திலிருந்து காபந்து செய்து அனுப்பி வைத்திருக்கிறேன். இந்த நடப்பும்கூட உங்களுக்கு வினோதமாகப் படலாம். ஆனால், அன்னத்துக்கு இக் காரியம் மகா ஆறுதல் கொடுக்கும் கட்டா யம். எனக்கும் அப்பிடித்தான். அதேைலயே இந்தமாதிரிப்பட்ட பகிரங்க ஏற்பாடு. - - - - இது இப்படி நிற்க நானும் புத்திசத்தியாகப் பிழைத்து வருகிறேன். வக்கற்றுப் புறப்பட்ட நான், இங்கு எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாகத்தான் இருந்து வருகிறேன். பூவாத்த குடியில் நானும் ஒரு மனிதனுக விளங்கிவிட வேண்டும் என்கிற ஒரு வைராக்கிய சித்தத்துடனேயே நான் இவ்விடம் நடந்து வருகிறேன். "பணம் இல்லையென்ருல் பிணம்" என்ற பாடம் ஓயாமல் எனக்கு ஞாபகத்தில் இருந்து வருகிறது. - உங்களுடைய பாசத்தை நான் இந்த சென்மத்தில் மறக் கவே முடியாது. அப்படி மறந்தால் நான் பாவியாயிடுவேன்! இந்த நேரத்தில் என்னப் பெற்ற மாதா இருந்தால் எஸ். ட உத்தேசம் மற்ற தாக்