பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

19


அன்னியிடம், பிராங்க் கேட்ட கருத்தைக் பற்றித் தாயிடமும் கூறாமல் அலட்சியம் செய்து விட்டார். அம்மா தவறாகத் தன்னைப் புரிந்து கொள்ன இடம் தந்துவிடக்கூடாது என்ற அச்சமும் கவ்விக் கொண்டது அன்னியை:


மதபோதகர் சும்மா இருப்பாரா? நேராக எமிலியிடம் சென்றார்: அன்னியை நான் மணந்து கொள்ளப் போகிறேன், என்னுடைய வரலாறு இது, என்று தனது குடும்ப் விவரங்களையும், பணிபுரியும் இடத்தையும் குறிப்பிட்டுக் கேட்டார்.


கோயில் பாதிரியார் என்றதுமே எமிலிக்கு ஒரு திருப்தி பிறந்திருக்கும்; அத்துடன் பிராங்க் பெசண்ட் இன்னி சம்மதம் பெற்றே தன்னிடம் வந்து கேட்டுள்ளாரோ என்ற அரை குறை நினைப்பில், திருமணத்திற்கு அன்னியைக் கேளாமலே ஒப்புக் கொண்டார்.


தாய் சம்மதம் கொடுத்ததை அறிந்த அன்னி வருந்தினார்: திருமணத்தை நிறுத்திடலாமா என்று சிந்தித்தார்: ஆனால், எமிலி வாக்குத் தவறாத ஒரு தாயrயிற்றே! குழப்பமடைந்தாள் அன்னி ஒருவாறு தன்னையே தான் சமாதானப்படுத்திக் கொண்டு, தாய் வாக்குக்கு ஏற்றவாறு ஒப்புக் கொண்டார்:


அந்த நேரத்தில், மான்செஸ்டர் என்ற நகரிலிருந்து எமிலி குடும்ப நண்பர் ராபர்ட்ஸ் என்பவர், சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்,


அவருடன் எமிலி, அன்னியுடன் கவிட்சர்லாந்து சென்றார்: இயற்கை திருவிளையாடல்களால் அழகு தவழ்ந்த பல இடங்களை அனைவரும் சுற்றிப் பார்த்தார்கள் அங்குள்ள புகழ்பெற்ற மாதா கோவில்களையும் கண்டுகளித்து விட்டு மன அமைதியுடன் லண்டன் வந்து சேர்ந்தார்கன்.