பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘发李


அங்கே தான் நீ தப்பு செய்திட்டே மேகலை செய்த பலகாரம் தான் எல்லாம்!” என்று விவரித்த சடுதியுடனே மனைவியை ஒரக்க: கொண்டு பார்த்தான் மாமல்லன்.


‘அதெல்லாக் பொய். நீங்க சொல்றது போல ஹோட்டல் பலகாரம் தான் அண்ணா!’ என்று விடை பகிர்ந்தாள் மேகலை,


காப்பிக் கோப்பைகளும் காலியாயின.


னிப்புத் தினுசுகள், பழவகைகள், துணிமணிகள்


f தனுசுகள், ஆகியவற்றைப் பிரித்து நீட்டினான் திருமாறன்.


‘ஏற்கெனவே நீ கொடுத்த வைர நகைகளின் சுமையைத் தாளமுடியாமல் நாங்கள் இரண்டு பேரும் திணறிக்கொண்டிருக்கிறோமே, போதாதா ? இவை வேறு எதற்கு, மாறன்?’’


  • மாமல்லன், நீ என் பேரில் சுமத்தியிருக்கிற அன்புச்


சுமையைத் தாளமுடியாதவனாக நான் இருக்கிறேன். அதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா ?’,


மாமல்லனின் இதயம் அன்பின் நெருக்கத்தினால் புடைத்து விம்மியது,


‘அண்ணியை அழைத்துக் கொண்டு ஒரு முறை எங்கள் ஸ்டுடியோவுக்கு வா, மாமல்லா.’


‘அண்ணியா. யாரது ?”


கேலி செய்கிறாயா?...உன் மிஸஸ். .


மேகலை உன்னை அண்ணா என்று அழைத்தாளே?”


“ஆமாம்...ஆமாம் !’


“மாறன் நீ எனக்கே மைத்துனன் ஆகப்போவதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தேனல்லவா ?”