10
அன்பு அலறுகிறது
"அது எப்படி?”
"கொலைகாரன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? திருடன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? விட புருஷன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? விபசாரி வாழத் துடிக்கிறாள்; அவளுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா?’’
"இருக்க முடியாதுதான்!” என்றாள் அவள். பிறகு "இருந்தால் உலகம் மனிதர்களின் உலகமாயிருக்க முடியாதுதான்!” என்றாள் அவள்.
"அது சரி. நீங்கள் யாரென்று எனக்குச் சொல்லவேயில்லையே?" என்றேன் நான்.
"சொல்கிறேன்; சொல்லத்தானே வந்திருக்கிறேன்!” என்றாள் அவள்.
"சொல்லுங்கள்?"
"நான்தான் சிநேகிதி!"
"சிநேகிதியா?”
"ஆமாம்; தூங்குவதற்கு முன்னால் நீங்கள் படித்துக் கொண்டிருந்தீர்களே, அந்த நாவலில் வரும் சிநேகிதி நான் தான்!”
"தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது எனக்கு, மார்பின்மேல் கிடந்த புத்தகத்தை எடுத்து பரபரப்புடன் பார்த்தேன்; 'சிநேகிதி' என்று அதன்