பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

11


தலைப்பில் போட்டிருந்தது; வியப்பின் மிகுதியால் விழித்தேன்.

"சிநேகிதி என்றால் சிநேகிதிக்குச் சிநேகிதி அல்ல நான்; சிநேகிதனுக்குச் சிநேகிதி!" என்றாள் அவள்.

"ஒஹோ, யார் அந்தச் சிநேகிதன்?’ என்று நான் கேட்டேன்.

"உங்களைப் போன்ற ஓர் எழுத்தாளர்!"

"என்னைப் போன்ற எழுத்தாளர் என்று தயவு செய்து சொல்லவேண்டாம்; நான் எப்பொழுதும் நானாகவே இருப்பதுதான் வழக்கம்!”

"அவரும் அப்படித்தான் சொன்னார்!”

"இருக்கலாம்; அதற்காக என்னை அவருடன் சேர்த்து விடாதீர்கள்!”

அவள் சிரித்தாள். சிரிததுவிட்டு, "உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அதுவரை நீங்கள் அவருடைய நாவலைப் படித்தீர்களோ படிக்கவில்லையோ, அவர் என்னைக் காதலித்தார்!"

"காதல் கதாசிரியரோ?”

"ஆமாம்.”

"சரிதான்; பெரும்பாலும் காதல் சொப்பனாவஸ்தையிலேயே தவித்துக்கொண்டிருக்கும் அவரைப் போன்றவர்கள், எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் காதலிப்பார்கள்; எதை வேண்டுமானாலும் யாரை