விந்தன்
11
தலைப்பில் போட்டிருந்தது; வியப்பின் மிகுதியால்
விழித்தேன்.
"சிநேகிதி என்றால் சிநேகிதிக்குச் சிநேகிதி அல்ல நான்; சிநேகிதனுக்குச் சிநேகிதி!" என்றாள் அவள்.
"ஒஹோ, யார் அந்தச் சிநேகிதன்?’ என்று நான் கேட்டேன்.
"உங்களைப் போன்ற ஓர் எழுத்தாளர்!"
"என்னைப் போன்ற எழுத்தாளர் என்று தயவு செய்து சொல்லவேண்டாம்; நான் எப்பொழுதும் நானாகவே இருப்பதுதான் வழக்கம்!”
"அவரும் அப்படித்தான் சொன்னார்!”
"இருக்கலாம்; அதற்காக என்னை அவருடன் சேர்த்து விடாதீர்கள்!”
அவள் சிரித்தாள். சிரிததுவிட்டு, "உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அதுவரை நீங்கள் அவருடைய நாவலைப் படித்தீர்களோ படிக்கவில்லையோ, அவர் என்னைக் காதலித்தார்!"
"காதல் கதாசிரியரோ?”
"ஆமாம்.”
"சரிதான்; பெரும்பாலும் காதல் சொப்பனாவஸ்தையிலேயே தவித்துக்கொண்டிருக்கும் அவரைப் போன்றவர்கள், எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் காதலிப்பார்கள்; எதை வேண்டுமானாலும் யாரை