பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 151 கடமைகளை வற்புறுத்த வேண்டும்; மடமைகளை வற்புறுத்தக் கூடாது. வளர்ந்து வரும் தியாக உணர்வை வளர்க்க வேண்டும்; வெறும் சபலங்களால் கப்பாசைகளால் அதை காசமாக்கக்கூடாது. இதுவே என் வேண்டுகோள்; இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அன்புப் பணி செய்யாம லிருப்பதே! அதற்குப் பரிசாக ரூபாய் ஐயாயிரம் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுப் பதற்காக எனக்குச் சொந்தமான சொத்துக்கள் பூராவையும் என் தோழி காக்தா பயன்படுத்த வேண்டும்! அந்தக் கடமையிலிருந்து அவள் தவறில்ை அரசாங்கமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடைசியாகச் சொல்லுகிறேன் : என் வாழ்க்கை உங்களுக்கோர் எச்சரிக்கை! புதிது புதிதாகக் கிளம்பும் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் காம் வளர்க்கவேண்டாம். அவை தாமாகவே வளர்ந்தன. வளர்ந்து வருகின்றன; வளர்ந்து வரப்போகின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி வாழும் சக்தியை மட்டும் நமக்கு நாமே வளர்த்துக்கொண்டால் போதும்! அதற்கு என் இனவிட்டுவைக்க விரும்பாததால் தான் என் அத்தானை கான் கொன்றேன். அவனைக் கொன்றதற்காக கான் வருந்தவில்லை; மகிழ்ச்சி அடைகிறேன் . அந்த மகிழ்ச்சியை நீதி மன்றத்தில் பலியிட கான் விரும்பவிலலை. அதற்குப் பதிலாக என்னை கானே எனக்கு என்னேயே பலியிட்டுக் கொள்கிறேன்-ஒம், சாந்தி'