பக்கம்:அன்பு மாலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அகண்டசச்சி தானந்த நன்னெறியில் சேர
ஆர்வமுள்ளோர் இங்குவம்மின்: அருணைநகர் தன்னில்
திகந்தமுறு புகழ்வீசிச் சாந்தமுறு மேனித்
தேசுடைய னாய்நிற்கும் ராமசுரத் குமாரின்
சுகந்தருநற் காட்சியிலே இன்புறலாம்; பேசிச்
சொல்கின்ற வார்த்தையிலே சாந்தத்தைப் பெறலாம்;
மகந்தருநற் பயனெல்லாம் ஒருங்கேவந் தெய்தும்;
மனம்இதற்குச் சாட்சியென்றே மதித்திடலாம் கண்டீர். 1

வம்மின் - வாருங்கள். திகந்தம் உறு - திசைகளின் முடிவை எட்டும். மகம் - வேள்வி.

கண்டபொருள் யாவையுமே உண்மையெனக் கொள்வீர்
காதினால் கேட்டவெலாம் மெய்யென்றே சொல்வீர்,
விண்டஉரை அத்தனையும் பொருள் உண்டென்றுரைப்பீர்,
வீணாக வாழ்நாளைப் போக்கிநலம் அறியீர்,
கண்டனைய மொழிபேசும் பெருஞானி,அருணைக்
கண்திகழும் ராமசுரத் குமாரென்னும் யோகி,
பண்தருநற் காட்சியினைப் பெற்றிட்டால் அங்கே
பயன்பெறலாம்; நயன்பெறலாம்; சாந்தியங்கே உண்டே.2

விண்ட - பேசிய, கண்டு அனைய- கற்கண்டைப் போன்ற. பண் - சிறப்பு,

உண்டவெலாம் மலமாகும்; பூசியவை அழுக்காம்:
உலகத்தில் காலமெலாம் வீணாகிப் போகும்;
கண்டவெலாம் மெய்யாகச் சொல்லுதற்கும் உண்டோ?
காதில்விழும் சேதியெல்லாம் மெய்யென்றே சொலவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/17&oldid=1460013" இலிருந்து மீள்விக்கப்பட்டது