இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
அன்பு மாலை
வல்லவர் தாமும் வந்து
வணங்கிடும் செய்ய பாதன்,
தொல்லைகள் தீர்க்கும் ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!
27
வல்லவர்க் கெல்லாம் வல்லன்
மாண்புறும் ஞானி யாகித்
அல்லல்கள் தீர்க்கும் தன்னை
அன்பர்என் றடைவார் பல்லோர்க்
கொல்லையில் லாத இன்பம்
இதுவெனக் காட்டும் நல்லோன்,
தொல்லைகள் தீர்க்கும் ராம,
சுரத்குமார் பாதம் போற்றி!
28
மருளற்று வாழ்வோர்க் கெல்லாம்
மாண்புறும் தலைவ னாகி
இருளற்ற ஞானச் செம்மல்,
எங்கனும் நிற்கும் ஐயன்,
தெருளுற்றுப் போற்று கின்ற
செல்வனாய் அருணை தன்னில்
சுருளற்று நிற்கும் ராம
சுரத்குமார் திருத்தாள் போற்றி!
29
மருள் - மயக்கம், தெருள் - தெளிவு, சுருளற்று- சுழலுதல் இல்லாமல்.
வெல்லுதற் கரிய ஐந்து
பொறியெலாம் வென்ற வீரன்,
மல்லலுற் றுளமெய்ஞ் ஞான -
மலையெனப் பெரியோர் சொல்வர்;