பக்கம்:அன்பு மாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அன்பு மாலை


ஆலத்தால் அமுதை யாக்கும்
அரனென வந்து நிற்பான்;
தூலத்தால் காணும் ராம
சுரத்குமார் திருத்தாள் போற்றி!

51


தூலத்தால் - இந்தச் சரீரத்தினால்.


மாய்வுற்ற பின்னர் வந்து
வாய்க்குமோர் வாழ்வு தன்னை
ஓய்வுற்ற காலை யேனும்
உணர்வுற நிற்பீர் கொல்லோ?
தேய்வுற்ற பிறவி தன்னைச்
சிறப்புறச் செய்ய லாமேல்
தோய்சுகம் காண்பீர்; ராம்
சுரத்குமார் தன்பால் வம்மின்.

52


அகலவுற்று நெஞ்சம் மாழாத்
தனுதினம் பலஎண் ணத்தில்
கலவுற்றுத் துன்பம் கண்டு
காமத்தில் வாய்ப்பச் சிக்கிப்
பலவுற்ற இடர்கள் பெற்றுப்
பாழ்போகா வண்ணம் எண்ணின்
சுலவுற்று வந்து ராம
சுரத்குமார் பாதம் சேர்மின்.

53

மாழாந்து- மயங்கி, கலவுற்று-இணைந்து , சுலவுற்று - கலந்தலுற்று

மன்னரும் புலவர் தாமும்
வந்திங்கு வணங்கு வார்கள்;
சொன்னசொல் கேட்டே இன்பம்
துய்க்கின்றார் இவன்தன் மாட்டே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/34&oldid=1303419" இலிருந்து மீள்விக்கப்பட்டது