இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு மாலை
73
காலன் வந்தால் மிகஅஞ்சிக்
கண்ணிர் ததும்ப நிற்கின்றோம்;
சீலன் இவன்பால் அன்புசெயின்
சிக்கல் தீர வழிபிறக்கும்;
கோலும் ராம சுரத்குமார்
குளிர்தாள் பணிமின்;அருணையிலே
சாலும் அன்பர் வணங்குகின்ற
198
அண்ணா மலையில் கோபுரம்போல்
அதன்பின் மலைபோல் தவமலையாய்
நண்ணா தாரும் பணிகின்ற
நயத்தைக் காட்டி இருக்கின்றான்;
திண்ணார் நெஞ்சம் கொண்டபிரான்,
சீலம் மிகவும் உடைய அண்ணல்,
செண்ணார் ராம சுரத்குமார்.
199
நண்ணாதாரும் - பகைவர்களும். செண் - செம்மை.
மோனம் என்னும் இராச்சியத்தின்
முழுதாம் உரிமை படைக்கின்றான்:
ஞானம்என்னும் பெருநிலத்தில்
நல்ல அரசாய் இருக்கின்றான்;
தீனர் வந்தால் அவர்தம்மைத்
திகழ உயர்த்தி விடுகின்றான்:
ஆன அருளான் ராமசுரத்
குமாராம் அரிய யோகியரோ.
200