பக்கம்:அன்பு மாலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அன்பு மாலை

சேம மாகிய மெய்ப்பொருள் தன்னையே
சிந்தைவைத் துயர்யோகி
ராம்சு ரத்குமார் அடியினை பணிபவர்
இருநிலத் துயர்ந் தோரே.

206

(14-12-79 அன்று பாடியவை)


முடிவளர்ப்பார்,தாடியினைமுற்றுமேவளர்ப்பார்;
முடிமழித்தே மொட்டையுடைத் தலையுடனே இருப்பார்;
செடிவளர்த்தல் போல்கேசம் படர்தரவே காண்பார்;
சிலகாலம் கண்மூடி யோகியென இருப்பார்;
குடிவளர்த்த உடலிதனைக் கோணலா யாக்கிக்
கூடுவார் அதிசயிக்க வித்தைகாண் பிப்பார்;
மடிவளர்க்கும் பிறவியற வழியறியார் போலே
வாழ்கிலான், பெருஞானி ராமசுரத் குமாரே.

207

மழித்தே - களைந்து.

யாவர்க்கும் இன்சொல்லே பேசுகின்றான்; சேய்போல்
இடியிடிஎன் றேசிரிப்பான்; நான்பாவி என்பான்;
வேர்களில் நான் இழிந்தோன் எனப்பணிவு பேசிச்
சேர்வாருக் கடக்கமெனும் பெருங்குணத்தைக்காட்டித்
தேவர்க்கும் தேவனிவன் எனஅறிந்தோர் உணரும்
செம்மலிவன், ராமசுரத் குமார்என்னும் நாமம்
ஏவர்க்கும். சொலக்கொண்டான்; பெருமையெதும்கொள்ளான்;  ::இவன்மாட்டே ஞானஒளி வீசுகின்ற தம்மா!

208


காலத்தை நாம்கொல்லா விட்டால்அக் காலம்
கடிதினிலே கொன்றுவிடும்; ஆதலினால் இந்த
ஞாலத்தில் பிறவியினில் தெய்வநலம் பேசி
நாள்நாளும் கழிப்போமேல் அக்காலம் நமக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/82&oldid=1460023" இலிருந்து மீள்விக்கப்பட்டது