முன்னுரை
இந்நூலை என்னுடைய பழம் பிறப்பில் யான் எழுதிய தாக என்னுடைய நண்பர் ஒருவரிடம் கூறினேன். "நாளு நாள் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னே" என்று வளையாபதி கேட்குந்தோறும், 'காளுநாள் பிறக்கின்றோமால் நமக்கு நாம் அழுவதென்னே ” என்று எனக்குள்ளேயே பாடிக்கொள்வது என் வழக்கம். ஆதலின் பழம்பிறப்பென் னத் தட்டில்லையே? சில ஆண்டுகளுக்கு முன்னர், விவேக போதினியின் ஆசிரியர், திரு.குப்புசாமி ஐயர் அவர்கள், என் னிடத்திலிருந்து ஒரு கட்டுரை பெறப் பெரிதும் முயன் றார். ஏழு செருப்புக்கள் தேய்ந்தனவோ? யானறியேன். 'மலையைக் கல்லி எலியைப் பிடித்தார்' என்பது பழமொழி. "மலை, இடுப்பு நோவு பட்டது; எலியைப் பெற்றது
33
என்
பர் கார்லைல். யான் பெற்ற எலி இக்கட்டுரைதான். பிள்ளைப் பேறு பார்த்த மருத்துவச்சியார், எனது நண்பர் விவேக போதினியின் ஆசிரியர். இதனை அந்நாளில் கண்டோர், இப் போது யான் புன்னகை புரிவதுபோல்,புன்சிரிப்புச் சிரித்தன ரோ, அல்லது பேய்ப் பிள்ளை என அஞ்சினரோ யான், அறி யேன். ஈது ஆணோ பெண்ணோ என்பது இன்னமும் எனக்கு விளங்கவில்லை. இக்காலப் போக்கில் முன்னணியில் நிற்கும் குழவி அப்படித்தான் இருத்தல் வேண்டுமோ!
י,
து,
ஈதொன்றுதான், என் பழம் பிறப்பென எண்ணிவிட் வேண்டா. எத்தனையோ பழம் பிறப்புக்கள் உள. இது பற்றியன்றோ உயிரின ழியா மையை எண்ணுந்தோறும், உள் ளங்குழம்புகின்றார் ஸ்வின்பர்ன் என்ற பாவாணர்.சேக்கிழார் டலை,கல்லெடுப்பு நாளன்று, இரவில் பேயோட்டும் பாட்டா கப் பாடக்கேட்டது என்னுடைய பழம்பிறப்புக்களில்தான். ஆனால், எனக்கோ அது தாலாட்டுப்பாட்டாய்த் தூக்கமே