பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11 பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்ற னர். கையில் 'தினமணி' பத்திரிகை இருக்கிறது, அதில் உள்ள அகில உலகச் செய்திகளைப் படித்து ரசமான பேச்சு நடக்கி கிறது இந்த இரண்டு தோழர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர், மற்றவர் பிரஜா சோசலிஸ்டுக்கட்சியில் பங்கு கொண்டவர். காங்கிரஸ் தோழரைப் பார்த்து, பிரஜா சோசலிஸ்ட் 'டாக்டர் லோகியாவை காங்கிரஸ் கேட்பார். சர்க்கார் கைது செய்தது நியாயமா? என்று அதற்குக் காங்கிரஸ்காரர் உடனே உங்கள் பட்டம் தாணு பிள்ளை மட்டும் திருவாங்கூரில் குஞ்சன் நாடாரை கைது செய்தது மட்டும் என்ன நியாயம்' என திருப்பிக் கேட் பார். இதைத் தொடர்ந்து ரசமான விவாதம் தொட ரும். இவர்கள் இப்படி விவாதம் செய்து கொண்டு இருக்கும் போது அந்த வீட்டுக் கூரையில் உள்ள பல்லீ ஒன்று ஒரு பூச்சியைப் பிடிப்பதற்காக பாயும். அப்போது அது சிறிது சத்தமிடும். பூச்சிப் பிடிக்கப் பல்லியிடும் சத்தம் கேட்டதும், திண் ணையில் உட்கார்ந்து அருமையான அரசியல் விஷயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள். தாங் கள் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு வாயில் சப்புக்கொட்டி தரையில் மூன்று தரம் விரலால் தட்டுவார்கள். பூச்சி பிடிக்கும் பல்லி சத்தமிட்டால் இவர்கள் ஏன் பேச்சை நிறுததவேண்டும் தரையை மூன்று தரம் தட்ட வேண்டும்!