பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

24 டுக்குத் தேவையான நல்லபணியைச் செய்து வந்தோம் என்பது தெரிகிறது. இந்த நிலையைக் கண்டுநாம் பெரிதும் மகிழ்கிறோம் பெருமைப்படுகிறோம். இந்த முறையில்தான். நாம் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து வருவதிலும் வெற்றி கண்டோம்! மேலும் மகத்தான வெற்றிகளைக் காண்போம் என்ப தும் உறுதி. சீர்திருத்த முறையில் திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை ஒருவராலும் மடுக்க முரியவில்லை என்று குறிப் பீட்டேன் இப்படி மறுக்க முடியாமற் போனாலும் சிலர் அந்தக்கால முதல் இருந்துவரும் பழக்கங்களையா தள்ளி விடுவது என்று கேட்கிறார்கள். அந்தக் காலம். அந்தக்காலம்! என்று பேசிவரும் தோழர்களையும்,பெரியவர்களையும் நான் கேட்கிறேன் நிர்ணயமாக அந்தக்காலம், எந்தக்காலம் என்பதை? சென்னையில் ஒரு பகுதிக்கு 'சூளை' என்று பெயரிடப் படுகிறது இங்கிருந்து இதுவரை சூளை என்பதற்குக் குறிப்பிட்ட நிர்ணயம் இருக்கிறது. புரைசைவாக்கம் என்பது அங்கேயிருந்து அதுவரையுள்ள பகுதிகள் என்பதற்கு அத்தாட்சியான வரம்பு கூறப்படுகிறது! ஒரு ரூபாய் என்றால் 16 அணா என்று ஒரு திட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வீசை என்பது 40 பலம் கொண்டது என்று ஒரு நிர்ணயம் உண்டு. ஒரு கஜம் என்றால் இத்தனை அடி அல்லது இத்தனை முழம் என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.