பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

135

போல் வாழை மரத்தின் வளைவான காய் குலைகள் தோறும் தொங்கும்.

யானும் தலைவியும் கூடித் தலைவனின் திறத்தையும் முருகனின் திறத்தையும் பாடினோம் பாட, என்னுடைய தோழிக்கு அசையும் மூங்கிலையுடைய மலையை உடையவன் அருளிய சமயம் போல முன் அன்புகாட்டாததால் மெலிந்த மெல்லிய தோள்களும் சிறந்தன என்று தன்னுள் கூறுபவனைப் போல் சிறைப்புறமாய் உள்ள தலைவன் கேட்பக் கூறியது

466. தலைவியின் ஆரஞர் தீர்க்கும் மருந்தாகுக

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்
எதிர் எதிர் ஒங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினைமிசை வீழ,
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர,
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் விறு எய்தி,
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!

தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள்.இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி.

கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு
‘ஒரும் நீ நிலையலை எனக் கூறல் தான் நாணி.

நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி.
என ஆங்கு
இணையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள்
அருந் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந் ஆகிச் செல்கம், பெரும நாம் விரைந்தே. - கலி 44