பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


என்று நான் சொல்ல -

வல்லே சொல்லக் கேட்பாயானால், அழகுடைய பெரிய மலையை வருத்தும் உன் மார்பில் மாணிக்கம் விளங்கும் முத்து வடம் பூமாலையுடனே அசைய அணிந்து கொண்டு, வருந்திய வாய்ப் பெருமூச்சு விடும் என் தோழி பொருட்டு ஒடும் ஒலியையுடைய பெரிய தேரை விரைந்து செலுத்துவாயாக என்று தோழி வரைவு வேண்டினாள்

327. எழுந்து தேரில் ஏறுக இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால், உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ? முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம், இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள்கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி உடைப் பொதி இழந்தான்் போல், உறு துயர் உழப்பவோ? நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால், மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ? ஆங்கு கொண்டு பலர் தூற்றும் கெளவை அஞ்சாய், தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழிஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக, இவள் நலம் ஏறுக, தேரே! - கவி 136 மணற் குன்று, பரவிய, மீன்பிடிக்கும் திமில் பொருந்திய, வீசும் அலைகள் திரண்டு வந்து அலைக்க, ஊறும் நீரை