பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிராமி பட்டர்

5



சரபோஜி மன்னர் தம்முடைய இருப்பிடத்தில் தங்கியிருந்தபோது அவர் மனம் எண்ணமிட்டது; 'நம்மைக் கண்டு இப்படி மாறுபாடாகப் பதில் சொன்னாரே அவர்; அவரை பித்தர் என்று சொன்னார்களே. பித்தராக இருந்தால் அவ்வளவு நேரம் ஒன்றையும் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டு நிற்க முடியுமா? அவர் நெற்றியிலே ஒளி இருந்ததே!' --இவ்வாறு அவர் சிந்தனை ஓடியது.

அப்போது முன் இரவு நேரம். மன்னருக்குத் துக்கம் வந்தது. சற்றே படுத்தார். அப்போது அவர் ஒரு கனவு கண்டார். கனவில், அபிராமியம்பிகை எதிரே நிற்கிறாள். தன்னுடைய காதில் உள்ள ஒரு தோட்டைக் கழற்றிக் கீழ்த்திசையில் வீசி எறிகிறாள். அது கீழ் வானத்தில் நின்று முழுமதியைப்போல் நிலவு பொழிந்து சுடர் விடுகிறது. அருகில் நின்ற அபிராமிபட்டர், "இதோ பாருங்கள். பூர்ண சந்திரனை. இன்று பெளர்ணமியல்லவா?" என்கிறார்.

அரசர் கனவிலிருந்து விழித்துக்கொண்டார். கனவிலே கண்ட காட்சி அவரை எல்லையற்ற வியப்பில் ஆழ்த்தி விட்டது. அபிராமியம்பிகையின் தரிசனத்தைக் கனவில் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி உருகினார். தன் பக்தருடைய பெருமையை விளக்கவே அம்பிகை கனவில் தோன்றினாள் என்று முடிவு செய்தார்.

அடுத்த கணமே எழுந்து அபிராமிபட்டரைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். அவர் வீடு சென்றார். அப்போதும் பட்டர் அபிராமியின் துதியாகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அங்கே சென்ற பின்னர் அரசர் அபிராமி பட்டரை வணங்கி எழுந்தார். அந்தாதியாகத் துதிகளைப் பாடிக்கொண்டிருந்த பேரன்பர் அப்போது