பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அபிராமி அந்தாதி

அவளுக்கு அடிமையாகி, அவள் அருளை எதிர்பார்த்து

வாழ்கிறவர்கள். { y

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர்

ஆனவாகள; சிந்திப்பவர் கற்றிசைமுகர் காரணர்:

சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர்.

இவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள அன்னை எவ்வளவு எளியவளாக இருக்கிறாள்! தேவலோகத்தில் தேவர்கள் தலைவரிசையையே சாலையாக வைத்து அவள் நடை போடுகிறாள். பிரமாவினது சக்திய லோகத்தில் புகுந்துவிட்டால் பிரமதேவர் தம் தியான மூர்த்தி வந்து விட்டாள் என்று குழைந்து வணங்குகிறார். நாராய னரோ அவள் அருளுக்கு ஏங்கி நிற்கிறார். சிவபெருமான் அவளுடைய அந்தரங்கத்தை நாடி தவம் கிடக்கிறார். இத்தகையவள் நிலவுலகத்தில் எவ்வளவு எளியவளாகி விட்டாள்!

சிங்காதனத்தில் அரசியாக இருப்பவள் அந்தபுரத்தில் குழந்தைகளைத் தழுவிக் களிக்கும் தாயாக இருப்பது இயல்புதான். அது அவள் அருளைக் காட்டும் அற்புதச்

செயல். - • .

உலகில் அப்பிராட்டிக்குக் கோயிலெடுத்துக் கும்பிடு கிறார்கள். திருவிழா நடத்துகிறார்கள்: சக்கரத்தில் ஆவா கனம் செய்து உபாசனை செய்கிறார்கள்; மந்திர தந்திர யந்திரங்களால் வழிபாடு செய்கிறார்கள். அழுக்கு மய ம்ான உடம்பு மெழுகாக உருக அன்பர்கள் அவளைத். தரிசித்து இன்புறுகிறார்கள். அவர்களிடத்தில் அவள் தன் தண்ணளியைப் பாலிக்கிறாள். தேவலோகத்திலும் சத்திய லோகத்திலும் வைகுண்டத்திலும் கைலாசத்திலும் அவள் மிடுக்காக இருக்கிறாள். புழுதி படிந்த இந்த மண்ணுவு.