பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 195

மங்கலை, செங்கல சம்முலை

யாள், மலை யாள்,வருணச் சங்கலை செங்கைச் சகல

கலாமயில், தாவுகங்கை பொங்கலை தங்கு புரிசடை

யோன்புடை ஆளுடையான், பிங்ஒலை நீலிசெய் யாள்வெளி

யாள்பசும் பெண்கொடியே!

(மங்கல வடிவினளும். சிவந்த கலசம்போலப் பருத்த தனங்களை உடையவளும், மலைமகளும், பல நிற வளை கள் அசையும் சிவந்த கையை உடையவளும், எல்லாக் கலைக்கும் ந்ாயகியான மயில் போன்றவளும், பாய்ந்த கங்கையில் பொங்கிய அலைகள் அமைதியாகத் தங்கும் புரிந்த சடையை உடைய பரமசிவனது ஒரு பக்கத்தைத் தனக்கே உரியதாகக் கொண்டு ஆளும் உரிமை உடைய வளுமாகிய அபிராமி, பொன்னிறம் உடையவள்; நீலவண் ணம் படைத்தவள்; செந்நிறமானவள்; வெண்மை நிறத் தினள்; பச்சைப் பெண் கொடி போன்றவள். * செங்கலசம் முலையாள், மகர ஒற்று, விரித்தல் விகா ரம்; ஓசையை நோக்கி விரிந்தது. - -

வருணச் சங்கு-வருணன் தந்த சங்கு என்றும் சொல்ல லாம். -

சடையோன் புடையாள், உடையாள் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்; சடையை உடையவனுடைய ஒரு பக்கத்தில் இருப்பவள், தலைவி என்று பொருள் கொள்ள வேண்டும். உடையாள் என்பது, ஸ்வாமிநி என்ற திருநாமத்துக்குச் சரியான மொழி பெயர்ப்பு)

அம்பிகையின் வடிவத்தையும் வண்ணத்தையும் தியா

னித்துப் பாடியது இந்தப் பாடல். இது அபிராமி அந்தா தியில் 21-ஆம் பாட்டு.