பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகல் அடைந்தேன்

51

(திருமகளாக இருக்கும் அன்னையே, வேறு யாரும் அறிய இயலாத இரகசியத்தை அடியேன் அறிந்தேன்; அங்ஙணம் அறிந்து கொண்டு, நின் திருவடி ஒன்றுக்கே புகலாகப் புகுந்து சேர்ந்தேன்; நின்னுடைய அடியார்களின் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரகலோகத்தின் தொடர்புடைய மனிதர்களை அஞ்சி விலகினேன். -

மறை-இரகசியம். செறிந்தேன்-நெருங்கிப்பொருந்தினேன். வெருவி-அஞ்சி. பிறந்தேன்: எதுகை நோக்கி இடையினம் வல்லினமாயிற்று, கரும நெஞ்சால்-தீவினை யையுடைய நெஞ்சினால், மறிந்து-தலைகீழாகி.)