உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

|| - -

அப்பாத்துரையம் - 19

போடும் முறை வந்தது. இதிலும் தகுதியுடையவர் சீட்டுப்பெறா நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே தகுதித் தேர்வாகத் தேர்தல் முறை வழக்குக்கு வந்தது. தமிழர் இதனைக் குடவோலை என்றனர். ஏனெனில், ஒவ்வொரு சீட்டும் ஓர் ஓலை. அது தேர்தல் பெட்டியாகிய குடத்தில் இடப்பட்டது. கிரேக்கர் ஓட்டுத் துண்டை வழங்கினர். ஆட்சித் தேர்வாகத் தொடங்கிய இதே முறை பின்னாள்களில் பெருந்தீர்ப்புகளுக்கும் அரசியல்

கண்டனங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

கிரேக்கரிடையே ஏதேன்சு நகரவெளியின் நடுமய்யமே நகர்த் தெய்வமான ஏதேனாவின் கோவிலாயிற்று.

தமிழரிடையே அம்பலத்திலிருந்தே தமிழர் குடியாட்சியின் சமய, சமுதாய, அரசியல் கூறுகள் தொடங்கின, பண்டு ஊரம்பலத்தில் ஆட்சி செய்த குழுவினர் அம்பலக்காரர் என்றும், அதன் உட்குழுவினர் அல்லது வாரியத்தார் அகம்படியர் அல்லது வாரியர் என்றும் வழங்கப்பட்டனர். இம் மூன்று பெயர்களும் இன்று சாதிப் பெயர்களாய் நிலவுகின்றன. அம்பலத்தில் வழக்காடுபவர் பெயராகிய மன்றாடி என்பதும் இன்று சாதிப் பெயராய் நிலவுகிறது.

வீரர்க்குச் சிறந்த இடத்திலோ, அம்பலத்தைச் சுற்றிலுமோ அல்லது ஊர்த்தலைவனானால், சிறப்பாகப் புகழ்மிக்கவனானால் அம்பலங்களிலே கல் எழுப்பப்பட்டது. அதனருகே தலைவன் குடியின் மரபுச் சின்னமான மரமும் குடிச் சின்னமான கொடியும் நிறுவப்பட்டன. அந்த இடம் கோவில் என்றும், மரம் கோமரம் என்றும், கொடியென்றும் வழங்கப்பட்டன.

தமிழர் அரண்மனையும் கோவிலும் இன்றளவும் கோயில் என்றும் அம்பலம் என்றும் வழங்கப்படுகின்றன.

அம்பலத்தில் பேசுபவர்க்கென நாற்கால் பந்தலிடப்பட்ட பின் அது மன்றம் எனப்பட்டது. கூடுபவர்க்கும் நீண்ட பந்தல்கள் இடப்பட்டபின் அதுவே கூடம் எனப்பட்டது. இவையனைத்துமே பிற்காலக் கோவில்களாயின. மன்றம் இருந்த இடம் மண்டப் மாகவும் கூடங்கள் இருந்த இடம் திருச்சுற்றுகளாகவும் மாறின.