உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

||-

அப்பாத்துரையம் - 19

தமிழர்க்கு இன்று நாடும் இல்லை, ஆட்சியும் இல்லை, உரிமையும் இல்லை. ஆகவே, முன்பு நாம் கிரேக்கரை ஒத்த நிறைகுடியாட்சி உடையவர்களாயிருந்தாலும் இன்று நமக்குக் குடியாட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை, நாடேயில்லை.

பிரிட்டனும் இந்தியாவும் காடுகளாய் இருந்த சமயங்களில் மற்ற நாடுகளுடன் நிலப்படை கடற்படையெடுத்து ஆண்டவர்கள் நாம். அவர்கள் ஆள நாம் உரிமையற்றிருக்கும் நிலை, குரங்குகள் ஆள மனிதர் மரமேறிக் குந்திக் கொண்டிருக்கும் நிலையேயாகும்.

இழந்த நிலைபெற, பண்டைக் குடியாட்சியின் புதுப்பிறப்பு, புதுமலர்ச்சி உண்டுபண்ண, தமிழர் தமக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேல்நாட்டு நாகரிகம் அளித்த குடியுரிமையை நன்கு பயன்படுத்துதல் வேண்டும்.