உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

65

முடியாது. ஒருவர் இராசராசனே சிறந்தவன் என்று கூறலாம். ன்னொருவர் இராசேந்திரனே என்பார். வேறு சிலர் குலோத்துங்கனே என்று கூற முனைவர். ஏனென்றால், ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையிலும் தனிச் சிறப்புடைய வராகவே இருந்தனர். சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் இராசராசன். அவன் வகுத்த ஆட்சி முறையே இன்றளவும் தென்னாட்டின் அடிப்படை ஆட்சிமுறையாய் இருக்கிறது. பேரரசின் புகழை உச்ச எல்லைக்குக் கொண்டுசென்றவன் இராசேந்திரன். அந்தக் கோட்டை சரியாமல் காத்து, அதனைச் சூழ்ந்து வாரியடித்த சூறாவளிப் புயல்களை அடக்கி, ஒளி கொண்டவன் குலோத்துங்கன்.

கு லோத்துங்கன் வாழ்வில் இருபகுதி உண்டு; ஒன்று சோழப் பேரரசு அவன் கைக்குள் வருமுன் உள்ள இளமைப் பகுதி மற்றது அவன் பேரரசனான பின் உள்ள பகுதி. இவற்றுள் வரலாற்றில் இடம் பெற்ற பகுதி, இராசராசனுடனும் இராசேந்திரனுடனும் அவனுக்குச் சரிசமப் புகழ் தந்த பகுதி, பிற்பகுதியேயாகும். முற்பகுதி வரலாற்றால் முழுதும் விளக்கப்படவில்லை. இது இயல்பே. ஏனெனில், அது வரலாறு கடந்த பெருமை உடையது. அது வரலாறாக எழுதப்பட்டால், அது வரலாறாயிராது; தென்னாட்டின் தலைசிறந்த வீரகாவிய மாய்விடும்.

குலோத்துங்கன் தந்தை வழியில் கீழைச்சாளுக்கியர் குடியில் வந்தவன். தாய்வழியில் சோழ மரபுக்கு உரியவன். அவன் தாய் தஞ்சைப் பெருஞ்சோழனான இராசராசனின் மகளான குந்தவை. தந்தையோ வீரபுலிகேசியின் வழியில் வந்த விசயாதித்தியன். கீழைச் சாளுக்கியர் அந்நாளில் வேங்கிநாட்டை ஆண்டு வந்தனர். வேங்கிநாடு என்பது கோதாவரி, கிருஷ்ணா தீரமாகிய இன்றைய ஆந்திரமாநிலப்பகுதி. குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சிங்காசனம் ஏறுமுன், அவனுக்குப் போட்டியாக அவன் சிற்றப்பன் மகனான இரண்டாம் விசயாதித்தியன் எழுந்தான். இருவர் பூசல்களுக்கிடையே மேலைச் சாளுக்கியப் பேரரசனான விக்கிரமாதித்தியன் நாட்டையே கைக்கொண்டான். அப்போது சோழப் பேரரசை ஆண்டவர்கள் இராசேந்திரன் புதல்வர்கள். விக்கிரமாதித்தியனுடன் போரிட்டு