148
அப்பாத்துரையம் - 25
ஆனால் அம்முவின் மனம் இருதலைக் கொள்ளியாக இன்னும் ஊசலாடவே செய்தது. "என் தாய்தந்தையர் வெறுக்கும் செய்தியை நான் செய்ய ஒப்பமாட்டேன்” என்பாள் அவள்.
எக்ஞன் நீ பிறந்ததுகூட உன் தாய்தந்தையர் விரும்பியன்று. பிறந்தபின் அவர்கள் விரும்பினர்; அவ்வளவுதான்; அதுபோல் அவர்கள் விரும்பி நீ காதல் கொள்ளமுடியாது. நீ காதலிப்ப வரை அவர்கள் விரும்பி ஏற்பர், அவ்வளவுதான்.
அம்மு: 'காதல் மனத்தைப் பொறுத்தது. ஆனால் அதைப் பிறரறியச் செய்வதுதான் செயலாகும். நான் என் காதலை உங்களிடம் காட்டியது கூடத்தவறு. ஆகவே என் தாய் தந்தையரை மீறி நான் உங்களை மணந்து கொள்ளத் துணியவில்லை'
எக்ஞன்: 'நீ துணியவேண்டாம். நான் துணிகிறேன்' என்று அவளை இழுத்துத் தழுவிக்கொண்டான். அவள் உள்ளூர மகிழ்ச்சி கொண்டும் அச்சத்தால் உடல் நடுங்கினாள். எக்ஞன் அவள் அச்சந்தீர ‘நீ எதற்கும் அஞ்சவேண்டாம். இப் போதே நீ என் மனைவி என்று நினைத்துக்கெள். யார் பிரித் தாலும் பிரியாதபடி உன்னைச் சிலநாளில் மணந்து கொள் கிறேன். கூடுமானால் இருவர் பெற்றோரும் இணங்கக் கூடா விட்டால் அவர்களை மீறி மணந்து கொள்வோம். ஆனால் பெற்றோர்களை மீறியதாக எண்ணவேண்டாம். மீறிய குற்றத்தையும் மீறவைத்த குற்றத்தையும் என் மீது போடு' என்றான்.
அவன் வீரமும் பெருந்தன்மையும் கண்டு அவள் பூரித்தாள். ஆயினும் ‘தாய்தந்தையரை எக்காரணம் கொண்டு மீறினாலும் தவறுதானே' என்றாள்.
‘உன் நியாயப்படியே உன்னிடம் பேசுகிறேன். மணமான பின்னும் அப்படியா?'
'இல்லை’
'சரி நான் கணவனாய் விட்டேன். உன்னையும் மீறி! இQ c என்னைத்தான் மீறக்கூடாது. சரிதானே'
அவள் தலை குனிந்தாள்.