காதல் மயக்கம்
167
இலட்சுமி: நான் என்ன செய்வதா? சட்டம் மதித்தால் என்ன? நாம் சட்டத்தை மதித்தால்தானே.
ஒன்றுமறியா இளம்பிள்ளையிடமிருந்து இத்தனை புரட்சிகரமான சொல் வருவது கண்டு உருக்கு வியப்படைந்தாள்.
உருக்கு: உன் புரட்சிகரமான போக்குக்கண்டு நான் திகைப் படைகின்றேன், இலட்சு.
இலட்சு: வஞ்சகம், கொடுமை, அநீதி ஆகியவற்றுக்குக் கண்ணை மூடிக்கொண்டு நீ தலைவணங்குவது கண்டு நான் திகைப்படைகிறேன், அக்கா!
உருக்கு: ஆத்திரப்பட்டுப் பேசாதே இலட்சு. விதியின் கையில் நாம் வெறும் பாவைதானே. அதை வெல்ல யாரால் முடியும்?
இலட்சு: யாராவது வெல்ல முயற்சித்ததுண்டா?
உருக்கு: விதியை வெல்ல நினைப்பது முட்டாள் தனம்
அம்மா?
இலட்சு: அப்படியானால் என்னை ஒரு முட்டாள் என்று வைத்துக்கொள். நாளை நீயே பார்ப்பாய், என் விதி யார் கையிலென்று.
உருக்குவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அச் சிறுபிள்ளை யறிவு தன் அறிவுக்குக் குறைந்ததல்லவென்று கண்டாள். தன் அறிவு தனக்கு இதுவரை உதவவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் மதியீனத்தைத் தன் மதியீனத்தால் திருத்துவதை விட அவள் புதுப்போக்கில் சென்று தான் புது அனுபவம் பெறட்டுமே என்றிருந்து விட்டாள்.
மறுநாள் இலட்சுமியின் வாக்கின் பொருள் தெரிந்தது. அவளை வீட்டில் எங்குமே காணவில்லை. விசுவநாதன் எங்கும் அவளைத் தேடி ஆள் விட்டும் பயனில்லை.
உருக்கு கவலையற்றிருப்பது கண்டு விசுவநாதன் அவளிடம் சென்று இவ்வளவும் உன் தூண்டுதல்தான். நீ அவளுக்கு உடந்தையா யிருப்பதைவிட அவள் உங்களை விட்டுத் தப்ப உடந்தையா யிருந்தது ஒரு தவறல்லவே' என்றாள்.