உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 33

திடுமென ஒரு புயல் அவனை நோக்கி வந்தது. அது ஒரு சூறாவளிப் புயல் அது அவனை வாரித் தூக்கிக் கொண்டு சென்று. வைரமாமலை கடந்து ஒரு பரந்த புலவெளியில் போட்டது.

இப்போது தான் இருந்த இடம் எது என்று அவனுக்குத் தெரியவில்லை. பல திசையிலும் நடந்து பார்த்தான், எல்லாத் திசையிலும் புல்வெளி பரந்து கிடந்தது.

பசியும் விடாயும் அவனை வதைத்தன. புல்லிடையே புல்லாக வளர்ந்த சில செங்கீரைகளை அவன் பறித்துத் தின்றான். தின்னும்போதே திடுமென அவன் தன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தான். விரைவில் தான் மனித உருவம் இழந்து, கழுதை உருவம் அடைந்ததை உணர்ந்து அவன் மனம் வருந்தினான்.

பசி மிகுதியாயிருந்ததால், அவன் செங்கீரையை மேலும் மேலும் தின்றான். சிறிது தொலைவில் வேறுவகைச் செங்கீரை இருந்தது. தற்செயலாக அவன் அதில் சில தின்றான். உடனே அவன் உடலில் மீண்டும் மாறுபாடு ஏற்படுவதை உணர்ந்தான். ஆனால், இத்தடவை அவன் கழுதை உடல் மாறி, மீண்டும் பழைய மனித உடலாயிற்று.

செங்கீரை வகைகளின் அரும் பயன்களை அவன் இப்போது உணர்ந்தான். கழுதையுருவமாக்கவல்ல வகையிலும், மனித உருவமாக்க வல்ல வகையிலும் இரு கொத்துக்கள் பறித்து வைத்துக் கொண்டான்.

அவன் மறுபடியும் நாடு நாடாக அலைந்தான். மீண்டும் பொன்மணி நாட்டுக்கு வரும்வரை அவன் கால் ஓயவில்லை. தொலைவில் தேங்கனியின் மாளிகை தெரிந்தவுடன் அவன் தன் முகத்தில் கரிபூசி உடைமாற்றிக் கொண்டு அங்கே சென்றான்.

மாளிகை வாயிலில் தேங்கனியும் தாயும் இப்போதும் நிற்பதை அவன் கண்டான். அவர்களும் கண்டார்கள். ஆனால், அவர்கள் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

O

“நீ யார் அப்பா?” என்று அவர்கள் கேட்டனர்.

அவர்களுக்கு மீட்டும் ஆவலூட்டும் வகையில் அவன்

பேசினான்.