உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(242)

அப்பாத்துரையம் - 35

6. உடைப்பண்பும் உளப்பண்பும்

வெள்ளிய ஆடைக்கும் வெள்ளை யுள்ளத்திற்கும் பேர் போன தலைவர் ஒருவர் இருந்தார். அவரை அழுக்கடைந்த ஆடையுடன் ஓர் அருங்கலைச் செல்வர் சென்று கண்டார்.

தலைவர் சற்று நேரம் புறக்கணிப்புக் காட்டியும், பேசும் போது ஏற இறங்கப் பார்த்தும் கடுஞ்சொல் சொல்லியும் அவரைப் பலவகையில் சிறுமைப்படுத்தினார்.

ஆனால், அக்கலைஞருடைய பேச்சு முறையாலும் நடையாலும் தமது மேடைப் பலகை மீது அவர் அவிழ்த்து வைத்த நூற்கட்டுகளாலும் தலைவர் அவர் தகுதி அறிந்து, அவரை மிகவும் பாராட்டிப் பல வகையிலும் உதவ முன் வந்தார். விடை கொள்ளும்போதும் தலைவர் தாமே வந்து கலைஞரை வழியனுப்பினார்.

றங்கி

அப்போது கலைச் செல்வர், முதலில் தாம் அடைந்த துன்பத்தையும் பின்பு பிரியுங்கால் தாம் பெற்ற பேற்றையும் ஒப்பிட்டு, நகைச்சுவையுடன், "வரும் போது வாராதே என்று குறிப்பு மீறி வந்தேன்; ஆனால் போகும்போது போகாதே என்ற குறிப்பை மீறிப் போகும்படியான பேறு வாய்த்தது” என்று இன்மொழி புகன்றார். தலைவர் புன்முறுவலுடன், “நான் யாரையும் உடைப் பண்பு கொண்டு மதித்துத்தான் வரவேற்பது வழக்கம், ஆனால், பிரிவது உளப்பண்பை மதித்தேயாகும். இதுவே இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை,” என்று பரிந்து நன்மொழி கூறினார்.