உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(244)

அப்பாத்துரையம் - 35

8. ஆக்கல் அரிது; அறிவுரை எளிது

கலைப்பயிற்சிக் கூடமொன்றின் அருகில், ஒரு சிலை எழுப்ப ஏற்பாடாயிற்று. கலையிலக்கணங்கற்ற பயிற்சி மாணவர் பலர் அதனைச் செய்யுங் கலைஞனிடம் சென்று, 'கண் இப்படி இருத்தலாகாது, மூக்கு இப்படி இருத்தல் வேண்டும்' என்று பலவாறாகத் தமது அறிவு நலத்தைக் காட்டினர். கலைஞன், அவர்கள் ஓயாத பஞ்சரிப்பைத் தவிர்க்கும் எண்ணத்துடன், “உங்கள் அனைவர் அறிவுரைகளையும் பின்பற்றியே நான் தொழிலாற்றப் போகின்றேன்” என்று கூறினான்.

அவ்வாறே அவன் ஒவ்வொருவரின் அறிவுரையையும் பொறுமையுடன் எழுதிவாங்கி அவையாவும் பொருந்து மாறு ஓர் உருவம் அமைத்தான். ஆனால், அதே நேரத்தில், பக்கத்தில் மறைவாக இன்னோர் உருவமும், தனது கலைப் பாங்கு முற்றும் புலப்படும்படி அவன் அமைத்துவைத்தான்.

உருக்களை அரங்கேற்றுகையில் அவன் இரண்டையும் திறந்து மக்கள்முன் காட்டி, "இது கலை இலக்கணப் புலவோர் அறிவுரையின் படி அமைந்தது, இஃது எனது கலைப் பாங்கின்படி அமைந்தது” என்று கூறினான்.

அறிவுரை தந்த அறிஞர்கள், தம் உரைகளின் பயனாய் அமைந்த அவருக்கத்தக்க உருவினைக் கண்டு வெட்கி னார்கள்.