உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

(245

9. தன்னலம் பேணிய குரங்கு

ஒரு மாம்பழக்காரனிடம் இருந்த மாம்பழப் பைகளுள் ஒன்றை ஒரு குரங்கு பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. அதன் தோழர்களாகிய மற்றைக் குரங்குகள் அதில் பங்கு கொள்ளும் அவாவுடன் அதனைப் பின்பற்றி ஓடின.

முடியாதபடி

கு

தாவி

தன்னிடமிருந்து எந்தக் குரங்கும் மாம்பழங்களைப் பறிக்க முதற்குரங்கு கிளைக்குக் கிளை யோடிற்று. பறிக்க முயலாமல் அன்புடன் பழங்களைக் கேட்டுச் சுற்றிய குரங்குகளிடமும் அக்குரங்கு பரிவு காட்டாமல், அவற்றின் மீது தான் தின்ற பழங்களின் கொட்டையை வீசியெறிந்தது.

பின்பற்றிச் சூழ்ந்த குரங்குகள் மிகுதி ஆக ஆகக் குரங் கிற்கு ஓடவும் முடியவில்லை. கொட்டைகளை எல்லாம் எறிந்து விட்டபின் எறிய வேறு ஒன்றும் அகப்படவுமில்லை. ஆகவே அது முழு மாம்பழங்களையே எடுத்து எறிய வேண்டிய ய தாயிற்று. விரைவில் பழங்கள் அவ்வளவும் இங்ஙனஞ் செலவாய்ப் போயின. அதன் பின்புதான், பழங்களையும் இழந்து இனத்தவர் நட்பையும் தான் இழந்து விட்டது குரங்கிற்குத் தெரியவந்தது.