உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(246) ||

அப்பாத்துரையம் - 35

10. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

ஒரு மாது பிறவியிலே ஊமையாகவும் செவிடாகவும் இருந்தாள். அவளுக்கு முதற் குழந்தை பிறந்தபின், ஒரு நாள் குழந்தை தொட்டிலிற் கிடந்து உறங்கும் நேரம், அவள் ஒரு பெரிய பாறாங்கல்லுடன் தொட்டிலின் பக்கம் செல்வதை அண்டை அயலிலுள்ளவர்கள் கண்டு,அவள் பித்துப்பிடித்துக் குழந்தையைக் கொல்லப் போகிறாளோ என்று அலறி ஓடினர்.

ஆனால் அவள் தொட்டிலின் அருகில் சென்றதும் அக்கல்லைத் தலைக்குமேல் உயரத் தூக்கித் தடாலென்று நிலத்தின்மீது ஓங்கி எறிந்தாள். அவ்வொலி கேட்டுக் குழந்தை திடுக்கிட்டு விழித்தவுடன், அவள் அக்குழந்தையை எடுத்து வாரி அணைத்துக்கொண்டு அன்புக் கண்ணீர் விட்டு அழுதாள்.

தன்னைப்போலத் தன் குழந்தையும் செவிடாக இருத்த லாகாதே என்ற கவலையினால் அவள் செய்த தேர்வு அஃது என்று கண்டு, அயலார் அச்சம் நீங்கி அகன்றார்கள்.