உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(260)

அப்பாத்துரையம் - 35

20. சிலந்தியின் படிப்பினை

ஆறுமுறை பகையரசரை எதிர்த்துப் போராடியும் வெற்றி பெறாமல் மனமுடைந்த அரசனொருவன், ஒரு குகையில் ஒளிந்து நினைவிலாழ்ந்திருந்தான்.

அந்த நேரத்தில் ஒரு சிலந்தி குகையின் ஒரு சுவரிலிருந்து மறு சுவருக்குத் தன் நூலைப் பறக்க விட்டு மிதந்து செல்ல முயன்று கொண்டிருந்தது. ஆறு தடவை முயன்றும் அது தோல்வியே அடைந்தது கண்டு. அரசன் அதன் செயலில் முற்றும் ஈடுபட்டு, "இப்போது அதன் நிலையும் என் நிலையும் ஒன்றே. அது என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்.” என்று எண்ணிக் கொண்டான்.

மாந்தரின் அறிவுக்கு இடமில்லாத அச்சிலந்தியினிடத்தில் மாந்தரின் மனமறிவுக்கும் ஒரு சற்றும் இடமில்லை என்றே தோற்றிற்று. அத சற்றும் அயர்வடையாமல் மீண்டும் பொறுமையுடன் சுவர் ஏறித் தாவிற்று. இம்முறை அதற்கு வெற்றியும் கிடைத்தது.

அரசனுக்கு இஃது ஒரு பெரும் படிப்பினை ஆயிற்று. 'முயற்சி திருவினையாக்கும்' என்ற உறுதியுடன் மறு முறையும் போரில் வெற்றி பெற்றான்.

உண்மைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கடமை மயக்கம் ஏற்படுங் காலத்தில் நடுநிலை கண்டு ஒழுகுந் திறம் வாய்ந்தவர். 'செயற்கரிய செய்யும்' ஒரு சிலரே.