உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

287

37. அழுகைக்குக் காரணம்

நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நடைபெறுகிறது. வழக்காளியாக ஏற்பட்டது ஒரு நான்கு வயதுக் குழந்தை, குழந்தையின் பக்கமாகச் சொற்போரிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞரானவர் நீதிமன்றத் தலைவருடைய மனத்தை மாற்ற எண்ணினார். அவர் நீதிமன்றத் தலைவரைப்பார்த்து, "இச்சிறு குழந்தையைப் பாருங்கள். இன்னுங் கண் திறவாத பச்சிளங் குழந்தை. தாய் தந்தையர் இருவருமே இறந்துபோய் விட்ட படியினால் திக்கற்றவனாய் இறக்கை யில்லாத பறவையைப்போல் இருக்கிறான். இவன் மீது நீங்கள் இரக்கங் காட்டாம் லிருப்பீர்களாயின் எதற்கும் பயனற்றவனாகப் போய்விடுவான்" என்று பலவாறு பேசியதோடு குழந்தையைக் கையிலே தூக்கிக் காட்டி உருக்கமாகப் பேசினார்.

அப்போது வழக்கறிஞருடைய க்கறிஞருடைய கையிலே இருந்த குழந்தை கூச்சலிட்டு அழுதான். அதைப் பார்த்து நீதிமன்றத் தலைவர் மனஇரக்கத்தோடு எண்ணமிட்டுக் கொண்டிருந் தார்.

தனைக் குறிப்பாக உணர்ந்துகொண்ட எதிர் வழக்காளியின் வழக்கறிஞரானவர் எழுந்து, “குழந்தாய்! நீயேன் இப்படிக் கதறியழுகிறாய்?" என்று கேட்டார்.

"

அதற்கு அச்சிறுவன், “எவனோ என் பின் பக்கத்திலே அடிக்கடி கிள்ளுகிறான்” என்று சொல்லிக்கொண்டே, மேலும் அழுதான்.