உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(288

அப்பாத்துரையம் - 35

38. பட்டை நாமம்

ஓர் ஊரில் மருதப்பன் என்னும பெயருடையவன் ஒருவன் இருந்தான். இவனுக்குச் சிறிது நிலபுலன்கள் இருந்தன. மக்கட் பேறு அதிகமாகிக் குடும்பம் பெருகிக் கொண்டிருந்தது.நிலபுலங் களின் வருவாய் குடும்பத்தைப் பாது காப்பதற்குப் போதியதாக இல்லை.

ஆகவே மருதப்பன் ஊரார்கள் எல்லோரிடமும் நூறு ரூபா, ஐம்பது ரூபா இப்படியாகக் கடன் வாங்கிச் செலவு செய்தான். நிலபுலங்களையும் கடன்காரர்கட்குக் கொடுத்து விட்டான். இவனிடங் கொடுத்தால் நிலபுலம் இருக்கிறது வாங்கிவிடலாம் என்று எண்ணியவர்கள் இவனுடைய நிலபுல மதிப்பிற்குமேல் பத்து மடங்கு கடன் இருப்பதை உணர்ந்தார்கள்.

ஒவ்வொருவருந் தத்தமது கடன்களை வாங்கிவிட வேண்டும் என்று அலைந்தார்கள். மருதப்பன் எல்லோரை யும் வரும்படி ஒரு நாளைக் குறிப்பிட்டான். குறிப்பிட்ட நாளில் கடனைத் தருவதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்திருக் கிறான்போலும் என்று எண்ணினார்கள். குறிப்பிட்ட நாளில் மருதப்பனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். திருநீறு பூசுபவ னாகிய மருதப்பன் அன்று தன்னுடைய நெற்றியிலேயே ஒரு பெரிய பட்டை நாமத்தை அணிந்திருந்ததோடு கை மார்பு முதுகு ஆகிய எல்லா விடங்களிலும் பட்டை நாமங்களைச் சார்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

கடன் கேட்கச் சென்றவர்கள் வாய்திறந்து எதுவுங் கேட்கவில்லை. அவனுடைய பட்டை நாமக்கோலத்தைப் பார்த்துக்கொண்டு யாதும் பேசாமல் திரும்பி விட்டார்கள். மருதப்பன் தன்னுடைய வாய்திறந்து பேசவேண்டிய வேலையே இல்லாமற் போய்விட்டதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.